சுழலும் காலச்சக்கரத்தின் நடுவே வளர்ந்து நிற்கிறேன் நான்.14 வருட
சிறைச்சாலையில் தொலைத்த என்னை மீட்டெடுத்தது என் கல்லூரிச்சாலை.படித்தது
தொழில்நுட்பம் என்றாலும் கற்றது என்னவோ விழித்துக்கொண்டே உறங்கும்
கலையைத்தான்.எழுதிய வரிகள் அனைத்தும் ‘Syntax Error !’ ஆக மாறவே,பிழையைத்
திருத்தும் ஆர்வக் கோளாறை கைவிடுத்தேன்...கைகோர்த்து நடைபோடும் மனிதரைப் படிக்க
ஆரம்பித்தேன்...
“அக்கா” என்றழைத்த தமக்கை கற்பித்தாள்
அணைப்பின் அர்த்தத்தை.
“Peter” என்று சீண்டிய தோழி கற்பித்தாள் தமிழின்
வாசத்தை.
கேள்விக்கு விடையளித்து கேள்வி கேட்கக்
கற்பித்தான் தோழன் ஒருவன்.
புரியா தருணத்திலும் புன்னகைக்க
படிப்பித்தான் மற்றொருவன்.
எனது வரையறைக்கும் ஒரு விதிவிலக்கு வேண்டும்
அல்லவா? இருக்கிறாள் ஒருத்தி...திறந்த புத்தகமாய் இருப்பினும் இவளை படிக்க
இயலவில்லை என்னால்.ஒவ்வொரு அணுகுமுறைக்குப் பின்பும் கேள்வி மட்டுமே விடையாய்
மிஞ்சுகிறது!என்றாவது விடையளிப்பாய் அல்லவா...விடாமுயற்ச்சியோடு தொகுக்குகிறேன்
வினாவினை....
கவிஞனின் கண்களுக்கு மட்டுமே புலப்படும்
சித்திரத் தாரகையோ நீ?
கள்வரும் காதலரும் மட்டுமே இரசிக்கும் மந்திர
மங்கையோ நீ?
இறுதிவரை நிழலாய் வரும் துணையோ நீ?
சிதறிய எண்ணங்களின் புகலிடமோ நீ?
புரியாப் புதிரே!
கதிரவன் கண்ணாமூச்சி ஆடும் நாடக மேடையோ நீ?
இறப்பின் ஒத்திகையான நித்திரையின் முகவரியோ
நீ?
கலைந்த கனாவையும் கரையும் கண்ணீரையும்
இலக்கணமாய் கொண்டவளே....
என்னுள் கானா அமைதியை உன்னுள் தேடுகிறேன்..
மௌனமே உந்தன் மொழியோடீ?
இரவே.... விடையில்லா வினாவோ நீ??
தங்கள் கல்லூரி வாழ்க்கையை பற்றிய என் வினாவிற்கு கிடைத்தது விடை :)
ReplyDelete